சென்னை:

மிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்தால், பெரியார் தொண்டு நிறுவனம் பொதுவுடைமை ஆக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தக்கு ஆதரவாக சிவகங்கையில் பாஜக இருசக்கர வாகன பேரணி நடத்தியது. இதில் கலந்துகொண்ட எச்.ராஜா, இருசக்கர வாகனத்தில் சென்றவாறு சிஏஏக்கு ஆதரவாக கோஷமிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், தமிழகத்தில் திராவிடர் கழகத்தினருக்கு எதிராக  இந்துக்கள் எழுச்சி அடைந்துள்ளதை கண்டு  பயம் வந்துவிட்டது. இந்து கடவுளை இழிவுபடுத்தியது குறித்து மன்னிப்பு கேட்காத  வீரமணிக்கு, தற்போது,   நாகரிகம் பண்பாடு பற்றி ரஜினிக்கு பாடம் எடுக்க வெட்கமாக இல்லையா என்று கேள்வி எழுப்பினர்.

அவரவர் செய்த வினைக்கு எதிர்வினை நிச்சயம் உண்டு என்றவர், திராவிடர் கழகத்துடனான தொடர்பை தி.மு.க. முறிக்கவில்லை என்றால் விரைவில் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரும் என்றும் எச்சரித்தவர், தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டால், பெரியார் தொண்டு நிறுவனம் பொதுவுடைமை ஆக்கப்படும் என்று கூறினார்.

செய்தியாளர்கள், அதிமுக அமைச்சர் பாஸ்கர் பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராஜா,   கூட்டணி குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும், இது தொடர்பாக நான் கருத்து கூற விரும்பவில்லை  என்றவர், ஏற்கனவே முதலமைச்சரே கூட்டணி குறித்து பேசக்கூடாது என தெளிவாக கூறியிருக்கிறார்,  அவர்களின் கொள்கை வேறு எங்களின் கொள்கை வேறு.

இவ்வாறு அவர் கூறினார்.