மும்பை: எதிர்வரும் உலகக்கோப்பை டி-20 தொடரில், தோனி இந்திய அணியில் இடம்பெற்றால், எங்களுக்கு எளிதாக இருக்கும் என்று கூறியுள்ளார் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்.
சர்வதேசப் போட்டிகளில் தோனியின் எதிர்காலமே என்னவென்று தெரியாத சூழலில், இத்தகைய தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார் குல்தீப் யாதவ்.
அவர் கூறியதாவது, “சமீபகாலங்களில் தோனியின் ஓய்வு குறித்து அதிகம் விவாதிக்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்து முடிவு செய்ய வேண்டியது அவர்தான். வேறுயாரும் கருத்துக்கூற வேண்டிய அவசியமில்லை.
அவர் நல்ல உடற்தகுதியுடன்தான் இருக்கிறார்.
இந்தியாவிற்காக இன்னும் சில காலம் விளையாடலாம். இவரைப் போன்ற அனுபவஸ்தர்கள் அணிக்கு அவசியம். அவரை நான் மிஸ் செய்கிறேன். அணியில் அவர் இருந்தால், எங்களைப் போன்ற வீரர்களுக்கு அது எளிதாக இருக்கும்” என்றார் குல்தீப்.
உலகக்கோப்பை டி-20 தொடரில் தோனி பங்கேற்பாரா என்று ஹர்பஜனிடம் கேட்டதற்கு, “அதுகுறித்து எனக்குத் தெரியாது. அவர்தான் முடிவு செய்ய வேண்டும். கடந்த உலகக்கோப்பை அரையிறுதிதான் அவரின் கடைசி சர்வதேசப் போட்டியாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றுள்ளார்.