டில்லி:

‘‘தேர்தலில் வெற்றி வித்தியாசத்தை விட நோட்டாவுக்கு பதிவான ஓட்டுகள் அதிகமாக இருந்தால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்’’ என்று முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர், டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ண மூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தேர்தலை பொறுத்தவரை நோட்டா அம்சம் மிக சிறப்பானது. நோட்டாவுக்கு விழும் ஓட்டுகள், வெற்றி பெற்ற வேட்பாளர் பெற்ற கூடுதல் ஓட்டுகளை விட அதிகமாக இருந்தால், மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இதை அமல்படுத்த சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். இந்த முறை அமலானால் நேர்மையான வேட்பாளரை நிறுத்த வேண்டிய கட்டாயம் அரசியல்கட்சிகளுக்கு ஏற்படும்’’ என்றார்.