திருவனந்தபுரம்:

கேரளாவில் பிஜேபி, ஆர்எஸ்எஸ். செயற்பாட்டாளர்களுக்கு எதிராக இனியும் கண்களை உருட்டினால், சிபிஎம்- காரர்களின் வீட்டிற்கே சென்று அவர்களது கண்கள் பிடுங்கி எடுக்கப்படும் என்று பிஜேபி தேசிய செயலாளர் சுராஜ் பாண்டே கூறியுள்ளார்.

இதை உறுதிப்படுத்தும் விதமாகவே பிஜேபி தேசிய தலைவர் அமித்ஷா மக்கள் பாதுகாப்பு நடை பயணத்திற்கு தொடக்கமிட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.

மேலும் அவர், மத்தியில் ஆளுவது பிஜேபி என்பது ஞாபகத்தில் இருக்கட்டும். இந்தியாவில் பதினோரு கோடி உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய கட்சி பிஜேபி. கேரளாவில் பிஜேபி செயற்பாட்டாளர்களுக்கு எதிராக அக்கிரமம் நடைபெற்றால் மத்திய அரசு தலையிடும்.

தேவைப்பட்டால் மாநில சிபிஎம் அரசைக் கலைக்கவும் செய்வோம். கேரளம் மற்றும் மேற்கு வங்க அரசுகள் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் முன்னாள் பெண்கள் முன்னணி தேசிய செயலாளராகவும் விளங்கிய சுராஜ் பாண்டே கூறினார்.

சுராஜ் பாண்டே அவர்களின் கூற்றிற்குப் பதிலடியாக, கண்களை மட்டுமல்ல சிபிஎம் – காரர்களின் முடியைக் கூடத் தொட முடியாது என்று சிபிஎம் மாநில செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் கூறினார்.