சென்னை,

மிழகத்தில் பஸ் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சியினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக மாணவர்களும் போராட்டத்திலும் குதித்துள்ளனர். இதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், பஸ் கட்டண உயர்வு குறித்து நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம் செய்திருக்கும். முடிவெடுத்துவிட்டு கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம்.

முன்பே கேட்டிருந்தால் நல்ல நிவாரணம் சொல்லும் வல்லுனர்கள் அரசுப் பணியிலேயே உள்ளனர். அரசாள்பவர் கேட்டால்தானே!

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.