ஜெயம் ரவி இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘வனமகன்’. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தை  திங் பிக் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் 23ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

இப்படம் குறித்த ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹீரோ ஜெயம் ரவிக்கு என்ன பிரச்சினையோ,,, உளறிக்கொட்டினார்.

“படத்தின் இயக்குனர் விஜய் தன்னை படப்பிடிப்பு முடியும் வரை குழந்தை போல பார்த்துக்  கொண்டார். சிமப்பட்டு படத்தை உருவாக்கியிருக்கிறோம். நிச்சயம் படம் வெற்றி பெறும்” என்று நன்றாகத்தான் பேச ஆரம்பித்தார்.

பிறகு ,”இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாவிட்டால், இயக்குனர் விஜய்க்கு மற்றொரு படத்தை சம்பளம் வாங்காமல் நடித்துக்கொடுப்பேன்” என்றார். அடுத்த விநாடியே… என்ன நினைத்தாரோ.. “சம்பளம் வாங்காமல் நடிப்பது முடியாது. ஒருவேளை இப்படம் தோல்வி அடைந்தால் இயக்குநர் விஜய்யுடன் இணைந்து அடுத்த படத்தை தயாரிப்பேன்” என்றார்.

பொதுவாக நன்றாகத்தான் பேசுவார் ஜெயம் ரவி. நேற்று என்ன ஆயிற்றோ, பாவம்!