சென்னை: மாநில அரசுகள் ஒப்புக்கொண்டால் பெட்ரோல், டீசல் விலையும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரலாம் என மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் விலையை தீர்மானிக்கின்றன. இதற்கு மத்திய மாநிலஅரசு விதிக்கும் வரிகள் காரணமாக அதன் விலைகள் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.  பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டிய நிலையில், தமிழக்ததிலும் லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ நெருங்கி வருகிறது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,.  பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த கேள்விக்குப் பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “இது தர்மசங்கடமான கேள்வி. இது குறித்து நான் என்னதான் பேசினாலும், குற்றத்தை மற்றவர்கள் மீது சுமத்துவதைப்போல் இருக்கும், கேள்விக்குப் பதிலளிக்காததைப் போல் இருக்கும்.

இது குறித்து மத்திய மாநில அரசுகள் இணைந்து பேச வேண்டும். இதனைச் சரிசெய்ய வேண்டும். ஒருவேளை மத்திய அரசு வரியை குறைந்தாலும், மாநில அரசுகள் வரியை உயர்த்த வாய்ப்புள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தால் இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட வேண்டும்.

இந்த விவகாரத்தில் மத்தியஅரசுக்கு  மட்டும் அதிகாரம் இல்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய – மாநில அரசுகளுக்கு கூட்டுப் பொறுப்பு உள்ளது மாநிலங்கள் ஒப்புக்கொண்டால் பெட்ரோல், டீசல் விலையை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்பிற்குள் கொண்டுவர வாய்ப்புள்ளது

இவ்வாறு அவர் கூறினார்.

பெட்ரோல் மீது உற்பத்தி வரியாக மத்திய அரசு லிட்டருக்கு ரூ.32.90 பைசாவும், டீசல் மீது லிட்டருக்கு ரூ.31.80 பைசாவும் வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.