சென்னை:

மிழகஅரசு ஒத்துழைத்தால், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள மீதமுள்ள சிலைகளும் மீட்கப்படும் என்று சிலைகடத்தல் தடுப்பு பிரிவி ஐஜி பொன் மாணிக்கவேல் கூறினார்.

நெல்லை அருகே உள்ள கோவிலில் இருந்து திருடுபோன ஐம்பொன்னாலான நடராஜன் சிலை,  ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் இருந்து, 37 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சிலைக் கடத்தல் பிரிவால் மீட்கப்பட்டு சென்னைக்கு வரப்பட்டு உள்ளது.

இந்த சிலையை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வரவேற்ற சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,

ஆஸ்திரேலியாவில் இருந்து நடராஜர் சிலையை மீட்க உதவி அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர்,

இந்த  பஞ்சலோக நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டது, எந்த சிலையும் காட்சி பொருள் அல்ல என்று கூறியவர், இந்த விவகாரத்தில் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்தவர், குறிப்பாக சிலைகள் கடத்தல் வழக்கில் தமிழக அரசை குறை சொல்ல விரும்பவில்லை என்றார்.

தமிழக அரசுக்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தில்தான் பிரச்சினை உள்ளது என்று தெரிவித்தவர்,  கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நீதிமன்றங்களே காரணம் என்றும், சிலைக்கடத்தல் வழக்குகளுக்கு தனது குழு மற்றும் ஊடகங்களும் உதவியாக இருந்தன என்றார்.

இதுபோல இன்னும் நிறைய சிலைகள் மீட்கப்பட வேண்டியுள்ளது என்று கூறியவர், இதன் காரணமாக எனக்கு அகம்பாவமோ, ஆணவமோ இல்லை. அரசு ஒத்துழைத் தால் மீதமுள்ள சிலைகளையும் மளமளமென மீட்டு தமிழகம் கொண்டு வந்துவிடுவோம்.

இவ்வாறு பொன்.மாணிக்கவேல் கூறினார்.