துபாய்: ஐபிஎல் 2020 சாம்பியன் பட்டத்தை ரோகித் ஷர்மா வென்றால், அவர் சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனை ஒன்றை சமன் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2013, 2015, 2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்றது மும்பை அணி. அதாவது, ஓராண்டு விட்டு ஓராண்டு இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது மும்ப‍ை அணிக்கு. அதாவது, மொத்தம் 4 முறை கோப்பை வென்றும்கூட, ஒருதடவைக்கூட கோப்பையை தக்க வைத்ததில்லை அந்த அணி.

ஆனால், கடந்த 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் தொடர்ந்து கோப்பையை வென்றதன் மூலம், சென்னை அணி அந்த சாதனையை செய்திருந்தது.

எனவே, கடந்தாண்டு கோப்பையை வென்ற மும்பை அணி, இந்த 2020ம் ஆண்டும் இறுதிப் போட்டியில் வென்று கோப்பையை தக்கவைப்பதன் மூலம் சென்னை அணி கேப்டன் தோனியின் சாதனையை சமன்செய்வார் மும்பை அணி கேப்டன் ரோகித் ஷர்மா. அதிகமுறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை(4 முறை) மும்பை அணியே தக்கவைத்துள்ளது.