சென்னை:

மிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகி உள்ள நிலையில், பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என்று தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்புக்கு உள்ளான சென்னையில், வீட்டை விட்டு வெளியே வரும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என சென்னை மாநகராட்சியும் உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில், இன்று செய்தியளார்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர், ஏ.கே.விஸ்வ நாதன்,   சென்னையில் முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு போலீசார் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்தவர்,  முகக் கவசம் அணியாமல் வருபவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 179 -ன் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.