மிழகத்தில் பெரியார் சிலைகளை இடித்துத்தள்ளப்போவதாக சமூகவலைதளங்களில் பதிவிட்ட பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோட்டில் நடைபெற்ற ம.தி.மு.க. பொதுக் குழுவில் வைகோ பேசினார். அப்போது அவர், எச்.ராஜாவைக் குறிப்பிட்டு, “”நாள் குறித்துவா! கள்ளத்தனமாக வராதே…இருட்டில் இரண்டு..மூன்று பேரை வைத்து கூலிக்கு மாரடிக்காதே…

மாறாக…நரேந்திர மோடியின் இராணுவம் பாதுகாப்புக்கு வரட்டும்…காவல் துறை உம்மை பாதுகாக்கத் துடிக்கட்டும்..உன் சகல படை…பரிவாரங்களோடு வா…நாள் குறி…

எங்கள் பெரியார் சிலையை உடைக்க வா….நான் வருகிறேன்…எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் வருகிறேன்…முடிந்தால் எங்கள் அய்யா பீடத்தைத் தொட்டுப் பார்…கை..கால்கள் துண்டாகும்” என்று வைகோ ஆவேசமாக பேசினார்.
.