டில்லி:

எஸ்பிஐ தனது ஆயிரத்து 300 கிளைகளின் பெயர் மற்றும் ஐ.எப்.எஸ்.சி கோட்களை மாற்றி அமைத்துள்ளது.

 

இது குறித்து எஸ்பிஐ மேலாண் இயக்குனர் பிரவீன் குப்தா கூறுகையில், ‘‘இந்த மாற்றம் குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஐ.எப்.எஸ்.சி கோட்கள் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பழைய ஐ.எப்.எஸ்.சி கோட் மூலம் நடக்கும் பண பரிவர்த்தனைகள் புதிய கோடுக்கு மாற்றப்படும். வாடிக்கையாளர்களுக்கு இதனால் எந்த சிரமமும் இருக்காது. எஸ்பிஐ.யின் துணை வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளதால் இந்த மாற்றம் செய்யப்படுகிறது’’ என்றார்.