சென்னை: ஐஐடி – சென்னையில் தேர்வெழுதிய மாணவர்களிடம், 2019 ஐபில் தொடரில், மே 7ம் தேதி மும்பை – சென்னை அணிகளுக்கு இடையே நடந்த தகுதிபெறும் போட்டி தொடர்பான கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி டாஸ் வென்றால், அவர் பேட்டிங் அல்லது பெளலிங்கில் எதை முதலில் தேர்ந்தெடுக்க சிபாரிசு செய்வீர்கள்? என கேட்கப்பட்டது.

பருவநிலையை அடிப்படையாகக் கொண்டு இந்த கேள்வி கேட்கப்பட்டது. போட்டித் தொடங்கும்போது, மைதானத்தின் ஈரப்பதம் 70% இருக்கும் மற்றும் அது பின்னர் 39 டிகிரி செல்சியஸ் சென்று, இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கும்போது 27 டிகிரி செல்சியஸிற்கு இறங்கிவிடும்.

எனவே, இந்த உறைவு நிலையை அடிப்படையாக வைத்து, சென்னை அணிக்கான பரிந்துரையை செய்யுமாறு மாணவர்களிடம் கேட்கப்பட்டிருந்தது என்று கூறப்படுகிறது. இந்த விஷயம் தற்போது வைரல் ஆகியுள்ளது.