இளையராஜாவுடன் டிரம்ஸ் கலைஞராக பணியாற்றவர் புருஷோத்தமன்.
அன்னக்கிளியின் மூலம் இளையராஜா திரையுலகில் கோலோச்சியதும் அவரது குழுவில் ஓர் அங்கமாக திகழ்ந்த புருஷோத்தமன், கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலம் இளையராஜாவுடன் வெற்றிகரமாக பயணித்தார்.
இந்த நிலையில் தன்னுடைய 75-வது வயதில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று விடியற்காலை 3.30 மணியளவில் வயது மூப்பு காரணமாக புருஷோத்தமன் இயற்கை எய்தினார்.

புருஷோத்தமன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருக்கும் இளையராஜா,புருஷோத்தமன் காலமானது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தாலும், இது யாருடைய சரித்திரத்திலும் இல்லாத ஒரு நிகழ்வு. அவர் இன்று என்னுடன் இல்லை. இது எனக்கு வருத்தத்தை தரக்கூடிய நிகழ்வு. இவ்வளவு சீக்கிரமாக இதை நான் எதிர்பார்க்கவில்லை. இறைவன் சீக்கிரமாகவே அவரை அழைத்துக் கொண்டான். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தனது வருத்தத்தையும் இரங்கலையும் பதிவு செய்துள்ளார்