ஜுன் 2-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள இளையராஜா இசைக் கச்சேரியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கலந்து கொள்ளவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஜுன் 2-ம் தேதி இளையராஜாவின் பிறந்த நாள். அன்று ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் ஒரு பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் எஸ்.பி.பி, யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, மனோ உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கான ஆயுத்தப் பணிகள் மே 22-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

ராயல்டி பிரச்சினைக்குப் பிறகு இளையராஜாவும் , எஸ்.பி.பி யும் சந்திக்கும் முதல் மேடையாக இது அமையும் எனத் தெரிகிறது. இதனால் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் தொற்றிக்கொண்டுள்ளது.