சென்னை:

ந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று தொடங்குகிறது. இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள பத்ம விருதுகள் வழங்கப்படும் நிகழ்ச்சியின் முதல் கட்ட நிகழ்ச்சி இன்ற ராஷ்டிரபதி பவனில் நடைபெற உள்ளது.

இன்றைய நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட உள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதை வழங்கி கவுரவிக்கிறார்.

கலை, அறிவியில், விளையாட்டு, மருத்துவம், சமூகம் உள்ளிட்ட துறை களில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில்  பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷன் போன்ற விருதுகள் வழங்கி  கவுரவிக்கப்பட்டு வருகிறது.

2018-ம் ஆண்டுக்கான 84 பேருக்கு பத்ம விருதுகள் அறிவித்துள்ளனர்.  இதில், இளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண், கிரிக்கெட் வீரர் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண், தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, பத்ம விருது வெற்றியாளர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று பத்ம விருதுகளை வழங்க உள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் இவ்விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.