பெண்களுக்குக் காத்திருக்கும் பேரபாயம்.. எச்சரிக்கும் தொழிலாளர் அமைப்பு….

சர்வதேச தொழிலாளர் அமைப்பு நடத்திய ஆய்வின் அடிப்படையில், 2020-ஆம் ஆண்டின் பிற்பாதியில் இந்த கொரோனா தாக்குதல் இப்படியே தொடருமேயானால், உலகளாவிய வேலை இழப்பு 11.9 சதவிகிதமாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. இது 340 மில்லியன் முழுநேர வேலை இழப்பிற்குச் சமம் என்றும் தெரிகிறது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கைப்படி, கோவிட் -19  வைரஸால் தனிநபர் வேலையில் உண்டாகும்  நெருக்கடி, உலகளாவிய தொழிலாளர் சந்தையில் மிகவும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த மோசமான சூழ்நிலையில், 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில்,  தங்குமிடம், உணவு, விற்பனை மற்றும் உற்பத்தி போன்ற நெருக்கடியால் ஊழியர்கள் குறிப்பாகப் பெண் தொழிலாளர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

இதற்குக் காரணம் உலகளவில், வேலைகளில் உள்ள பெண்களில் கிட்டத்தட்ட 510 மில்லியன் பேர், அதாவது 40 சதவீதம் பெண்கள் இந்த பாதிப்பு அதிகம் உள்ள துறைகளான வீட்டு வேலை, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புப் பணி ஆகிய நான்கு துறைகளில் பணிபுரிகின்றனர்.  இவர்கள் இந்த கொரோனா சூழலில் வருமானம் உள்ளிட்டவற்றை இழக்க நேரிடும் அளவுக்கு அதிக ஆபத்தில் உள்ளனர்.  மேலும் இவர்கள் சமூகப் பாதுகாப்பைப் பெறுவதற்கான வாய்ப்புகளும் குறைந்துள்ளதாக ஐ.எல்.ஓ தெரிவித்துள்ளது.

இதுபற்றி பேசிய ஐ.எல்.ஓ அதிகாரியான ரைடர், “இப்போது நாம் எடுக்கும் முடிவுகள் 2030 ஆம் ஆண்டிற்கும், அதற்கு அப்பாலும் வரும் ஆண்டுகளில் எதிரொலிக்கும். பல நாடுகள் தொற்றுநோயின் வெவ்வேறு கட்டங்களில் உள்ள நிலையில், இந்த நெருக்கடியிலிருந்து நாம் வெளியேற விரும்பினால் முயற்சிகளை இரட்டிப்பாக்குவதைத் தவிர வேறு வழியில்லை” என்று எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.