சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும், வரும் திங்கட்கிழமை அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார் என்றும் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரபரப்பாக செய்தி பரவியது.

இந்நிலையில், ஆர். கே. நகரில் நான் போட்டியிடவில்லை”  என்று  நடிகர் விஷால் பரபரப்புக்கு முற்றுபுள்ளி வைத்தார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள சென்னை ஆர்.கே.நகரில் திமுக, அதிமுக, டிடிவி தினகரன், ஜெ.தீபா உள்பட சுயேச்சைகளும் களம் இறங்குகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமல் ஆதரவோடு, நடிகர் விஷாலும் களமிறங்க இருப்பதாக பரபரப்பாக செய்திகள் வெளியாயின.

இதையடுத்து, நடிகர் விஷால்,  “ஆர்கே நகரில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை, நான் போட்டியிடுவதாக வெளியான செய்தி தவறானது” என்று பரபரப்புக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்.