மும்பை: மும்பை, புனேயில் வரும் 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் மும்பை உள்பட கடலோர பகுதிகளில்  வரும் 15ம் தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. மும்பை நகரை பொறுத்தவரை மிதமான மழை எதிர்பார்க்கலாம்.

தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரியில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறி உள்ளனர். இதுகுறித்து வானிலை மையம் கூறி உள்ளதாவது:

வரும் 15ம் தேதி வரை புனே, கோலாப்பூர், சத்தாரா மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடக்கு மகாராஷ்டிரா, மரத்வாடா, விதர்பா ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

மலையோர பகுதிகளில் மேக கூட்டம் அதிகமாக காணப்படும்.  24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்துக்கு அங்கும், மத்திய மகாராஷ்டிராவில் மிதமான முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.