சென்னை:
திருமணம், மருத்துவ காரணங்களுக்காக, மரணம் போன்ற அவசர தேவைகளுக்காக வெளியூர் செல்பபவர்களுக்கு உடனடியாக பாஸ் வழங்குவது குறித்து தமிழகஅரசு  பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இது மே 17ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், வெளி மாவட்டங்களில் சிக்கி உள்ள உறவினர்கள் வீட்டு திருமணம் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள், மரணம் போன்ற நிகழ்வுகளிலும் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. இதற்காக தமிழகஅரசு இ.பாஸ் வழங்குவதாக அறிவித்து உள்ளது. இந்த அனுமதிச் சீட்டுகள் மின்னணு முறையில் வழங்கப்படுகிறது. ஆனால், இதற்கு காலதாமதம் ஏற்படுகிறது.
இதுதொடர்பாக ருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன்  என்பவர், மருத்துவம் மற்றும் இறப்புகளுக்கு, வெளியூர் பயணிப்பவர்களுக்கு தாமதமாக அனுமதிச் சீட்டு வழங்குவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில்மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி,  புஷ்பசத்யநாரயணா அமர்வு,  24 மணிநேரமும் பாஸ் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒருவர் பாஸ் பெற 2 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்றால் எமர்ஜென்சி என்பது என்ன அர்த்தம் என்று கூறியவர்,  வரும் திங்கட்கிழமை உரிய பதலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.