திருவனந்தபுரம்: கேரளாவில் குடியரசு தினத்தன்று முதல் முறையாக அங்குள்ள அனைத்து மசூதிகளும் தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவு, என்பிஆர் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. இவற்றுக்கு இடையில் கேரளாவானது ஒரு முக்கியமான முடிவை மேற்கொண்டு இருக்கிறது.

குடியரசு தினத்தன்று, கேரளாவில் உள்ள அனைத்து மசூதிகளும் தேசியக் கொடியை ஏற்ற உள்ளது. இது தொடர்பாக, கேரள மாநில வக்ப் வாரியம் தேசிய கொடியை ஏற்றுவதற்கான உறுதிமொழியை அனுப்பியுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு ஏற்ப காலை 8.30 மணிக்கு கொடிகள் ஏற்றப்படும். மேலும் முன்னுரையின் நகலும் சுற்றறிக்கையுடன் மசூதிகளுக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆளும் சிபிஐ (எம்) மாநில குழு உறுப்பினரும் மாநில வக்ஃப் வாரியத்தின் தலைவர் டி கே ஹம்சா கூறியதாவது: நாடு ஒரு முக்கியமான கட்டத்தை கடந்து செல்கிறது. நாங்கள் நீண்ட நேரம் அமைதியாக இருக்க முடியாது.

முஸ்லீம் சமூகத்தின் உறுப்பினர்கள் முன்பைப் போல பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள். இத்தகைய செயல்கள் தேசிய ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும். அவர்களுக்கு போதுமான நம்பிக்கையை அளிக்கும் என்றார்.

இதற்கிடையில், குடியரசு தினத்தன்று மாநிலத்தின் நீளம் முழுவதும் ஒரு மனித சங்கிலி நடத்த ஆளும் இடது ஜனநாயக முன்னணியான எல்டிஎப் முடிவு செய்துள்ளது.