சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து, முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் இன்று பதவியை ராஜினாமா செய்கிறார். பஞ்சாப் தேர்தல் முடிவுகள் குறித்து சிரோன்மணி அகாலி தள மூத்த தலைவரும் முதலமைச்சருமான பிரகாஷ் சிங் பாதல் கூறியதாவது:

தேர்தலில் அகாலி தளம் கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது குறித்து ஆராய கமிட்டி அமைக்கும்படி எனது மகனும் சிரோன்மணி அகாலி தள தலைவருமான சுக்பீர் பாதலை கேட்டுக் கொண்டுள்ளேன். எனது பதவியை இன்று ராஜினாமா செய்வேன். ஆளுநரை சந்தித்து எனது ராஜினாமா கடிதத்தை வழங்குவேன்” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது:  மாநில வளர்ச்சிக்காக பிரச்சினைகளின் அடிப்படையில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்போம். அம்ரிந்தர் சிங்குடன் இணைந்து மாநிலத்தின் வளர்ச்சிக்காக செயல்பட தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு பாதல் கூறினார்.