டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,54,161 ஆக உயர்ந்து 11921  பேர் மரணம் அடைந்துள்ளனர்

 

நேற்று இந்தியாவில் 11,132 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 3,54,161 ஆகி உள்ளது.  நேற்று 2,006 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 11,921 ஆகி உள்ளது.  நேற்று 7,228 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,87,552 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,54,643 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 2,701 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,10,744 ஆகி உள்ளது  நேற்று 1,409 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,537 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,802 பேர் குணமடைந்து மொத்தம் 57,851 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,515 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 48,019 ஆகி உள்ளது  இதில் நேற்று 49 பேர் உயிர் இழந்து மொத்தம் 528 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1438 பேர் குணமடைந்து மொத்தம் 26,782 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 1,859 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 44,688 ஆகி உள்ளது  இதில் நேற்று 437 பேர் உயிர் இழந்து மொத்தம் 1837 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 73 பேர் குணமடைந்து மொத்தம் 16,500 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் நேற்று 524 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 24,628 ஆகி உள்ளது  இதில் நேற்று 28 பேர் உயிர் இழந்து மொத்தம் 15534 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 418 பேர் குணமடைந்து மொத்தம் 17,090 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 507 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 14,598 ஆகி உள்ளது  இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 435 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 294 பேர் குணமடைந்து மொத்தம் 8,964 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.