டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,06,613 ஆக உயர்ந்து 39,820 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 51,282 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 19,06,613 ஆகி உள்ளது.  நேற்று 849 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 39,820 ஆகி உள்ளது.  நேற்று 51,220 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 12,81,660 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,84,684 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 7,760 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,57,956 ஆகி உள்ளது  நேற்று 300 பேர் உயிர் இழந்து மொத்தம் 16,142 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 12,326 பேர் குணமடைந்து மொத்தம் 2,99,356  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,063 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,68,285 ஆகி உள்ளது  இதில் நேற்று 108 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,349 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,501 பேர் குணமடைந்து மொத்தம் 2,08,784 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 9,747 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,76,333 ஆகி உள்ளது  இதில் நேற்று 67 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,604 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,953 பேர் குணமடைந்து மொத்தம் 95,625 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 6,259 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,45,830 ஆகி உள்ளது  இதில் நேற்று 110 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 2,704 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,772 பேர் குணமடைந்து மொத்தம் 69,272 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 674 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,39,156 ஆகி உள்ளது  இதில் நேற்று 12  பேர் உயிர் இழந்து மொத்தம் 4,033 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 972 பேர் குணமடைந்து மொத்தம் 1,25,726 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

patrikaidotcom, tamil news, Corona, India, 1906613 affected, 39820 died, கொரோனா, இந்தியா, 19606613 பேர் பாதிப்பு, 39820 பேர் மரணம்