டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 66,82,073 ஆக உயர்ந்து 1,03,600 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 59,893 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 66.82,073 ஆகி உள்ளது.  நேற்று 885 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,03,600 ஆகி உள்ளது.  நேற்று 75,659 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 56,59,110 ஆகி உள்ளது.  தற்போது 9,18,429 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 10,244 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 14,53,663 ஆகி உள்ளது  நேற்று 263 பேர் உயிர் இழந்து மொத்தம் 38,347 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 12,982 பேர் குணமடைந்து மொத்தம் 11,62,585  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 4,256 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,23,512 ஆகி உள்ளது  இதில் நேற்று 38 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,019 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,558 பேர் குணமடைந்து மொத்தம் 6,66,433 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 7,051 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,47,712 ஆகி உள்ளது  இதில் நேற்று 84 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 9,370 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,064 பேர் குணமடைந்து மொத்தம் 5,22,846 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 5,395 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,25,391 ஆகி உள்ளது  இதில் நேற்று 62 பேர் உயிர் இழந்து மொத்தம் 9,846 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,572 பேர் குணமடைந்து மொத்தம் 5,69,664 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 2,971 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,17,437 ஆகி உள்ளது  இதில் நேற்று 63 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,092 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,269 பேர் குணமடைந்து மொத்தம் 3,66,321 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.