டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,40,312 ஆக உயர்ந்து 1,33,773 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 44,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 91,40,312 ஆகி உள்ளது.  நேற்று 510 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,33,773 ஆகி உள்ளது.  நேற்று 41,405 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 85,51,444 ஆகி உள்ளது.  தற்போது 4,43,033 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 5,753 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,80,208 ஆகி உள்ளது  நேற்று 50 பேர் உயிர் இழந்து மொத்தம் 46,573 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,060 பேர் குணமடைந்து மொத்தம் 16,51,064  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 81,512 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,704 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,73,046 ஆகி உள்ளது  இதில் நேற்று 13 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,654 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,537 பேர் குணமடைந்து மொத்தம் 8,36,509 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 24,868 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 1,121 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,62,218 ஆகி உள்ளது  இதில் நேற்று 11 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 6,938 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,631 பேர் குணமடைந்து மொத்தம் 8,41,026 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 14,249 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,655 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,69,995 ஆகி உள்ளது  இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,605 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,010 பேர் குணமடைந்து மொத்தம் 7,45,848 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 12,542 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 5,254 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,62,696 ஆகி உள்ளது  இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,050 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,227 பேர் குணமடைந்து மொத்தம் 4,94,664 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 65,864 பேர் சிகிச்சையில் உள்ளனர்.