பெங்களூரு:

கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.


இந்தியா டுடே, கார்வி நிறுவனம் இணைந்து கர்நாடகாவில் தேர்தல் கருத்து கணிப்பை நடத்தியுள்ளது. அதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அதில், ‘‘தற்போதைய சூழலில் காவிரி விவகாரம் காங்கிரசுக்கு ஆதரவான ஓட்டுகளை பெற்று தரும். ஆனால், காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை கிடைப்பது சந்தேகமே.

மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரசுக்கு 90 முதல் 101 தொகுதிகள் கிடைக்கும். பா.ஜ.க.வுக்கு 78 முதல் 86 தொகுதிகள் கிடைக்கும். தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி 34 முதல் 43 தொகுதிகள் வரை கைப்பற்றும். பிற கட்சிகள் 4 முதல் 7 தொகுதிகளை பெறும். மொத்தத்தில் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையவே அதிக வாய்ப்புள்ளது.

ஆட்சி அமைப்பதில் தேவகவுடா முக்கிய பங்காற்றுவார்ர். 33% பேர் சித்தராமையா முதல்வராக தொடர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். காங்கிரசுக்கு 37 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும். பாஜவுக்கு 35 சதவீதம் பேர் ஆதரவாக உள்ளனர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.