ஸ்ரீநகர்:

காஷ்மீரில் ஜெய் -இ -முகமது இயக்க பயங்கரவாதிகள் பல குழுக்களாக நாசவேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டில்லியிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளின் முயற்சியை முறியடிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.