டெல்லி:

ந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  1409 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 21,700-ஆக உயர்ந்துள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லாவ் அகர்வால், இந்தியாவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 686-ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வருவோரின் விகிதம் 19.89 சதவீதமாக உள்ளது

கடந்த 14 நாட்களில் 78 மாவட்டங்களில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏதும் பதிவாகவில்லை.

24 மணி நேரத்தில் புதிதாக  1409 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 21,700-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.