மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 327 காவலர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டிலேயே கொரோனா தொற்று  மகாராஷ்டிராவில் அதிகம் காணப்படுகிறது. காவல்துறையினரும் அதிக அளவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அம்மாநிலத்தில் மேலும் 327 போலீசாருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் நோயாளிகளின்  எண்ணிக்கை 23,360 ஆக உள்ளது.

இன்று கொரோனா பாதிக்கப்பட்டு இருந்த ஒரு காவலர் உயிரிழந்துள்ளார். அதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 246 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இதுவரை 20,139 காவலர்கள் கொரோனா நோய்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 2,975 காவலர்கள் சிகிச்சையில் உள்ளனர்.