மும்பை:

காராஷ்டிராவில் ஓடிக்கொண்டிருக்கும் அரசு பேருந்துகளில் விரைவில் இலவச வைபை வசதி அறிமுகம் செய்யப்பட் இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பஸ் போக்குவரத்தை மராட்டிய அரசும், மின் நிறுவனமும் இணைந்து இயக்கி வருகிறது.

இந்த நிறுவனங்கள் சார்பாக பேருந்துகளில் வசதிகளை மேம்படுத்துவது குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

அப்போது மாநகர பேருந்துகளில் வைபை, வீடியோ போன்ற வசதிகள் செய்வதுகுறித்து முடிவு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து பஸ்களில் இலவச வை-பை வசதி ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் நவம்பர் மாதம் முதல் அனைத்து பேருந்துகளிலும் இலவச  வை-பை வசதி ஏற்படுத்தப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும், பேருந்துகளில்  பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், எப்எம், சினிமா பாடல் ஒலி-ஒளிபரப்பு போன்ற வசதிகளும், ஜிபிஎஸ் கருவி பொருத்தவும் முடிவு செய்து இருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறினர்.

இதற்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திடம் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் தங்களது பணிகளை தொடங்குவார்கள் என்றும் அதிகாரிகள் கூறினர்.