டமாஸ்கஸ்:

சிரியா டெய்ர் அல்-சோர் மாகாணம் மயாதின் நகரில் சிரியா மற்றும் ரஷ்ய ராணுவ வீரர்கள் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில் 35 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 43 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இறந்தவர்களில் 26 பேர் சிரியாவை சேர்ந்தவர்கள். 9 பேர் ரஷ்யாவை சேர்ந்தவர்கள். இந்த பகுதியில் உள்ள ஆயுத கிடங்கை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்றிரவு நடத்திய தாக்குதலில் 4 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர்.