சென்னை:

சென்னை  மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் குழுவில்  பல வீடியோக்கள் வெளியாகி வருகிறது. அதில் கொரோனா  தொற்று காரணமாக தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் டான்ஸ் ஆடும் டிக்டாக் வீடியோ வெளியாகி உள்ளது.

இதை மாநகராட்சி அதிகாரிகள் பலர் ஷேர் செய்துள்ளார்கள். தற்போது வைரலாகி வருகிறது.

இது போன்ற செயல்கள் எதைக்காட்டுகிறது என்பது தெரியவில்லை… நோயாளிகள் ஜாலியாக இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறதா அல்லது சிகிச்சை என்ற பெயரில் அவர்களை அடைத்துவைத்துக்கொண்டு, எந்தவித சிகிச்சையும் அளிக்காமல் வைத்துள்ளார்கள் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதே,  அதை உறுதிப்படுத்துகிறதா என்பது தெரியவில்லை..

 

ஆனால், இதுவும் ஒரு அதிசயம்தான்…