சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில்14 பேர் கொரோனாவால் உயிரிழப்பு…
தமிழகத்தை பொறுத்தவரை, தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதேவேளையில், மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,168 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னை யில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 77,338 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 58,615 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 17,469 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ளதால், சென்னையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,253 ஆக உயர்ந்துள்ளது.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 5 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஒருவரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். தனியார் மருத்துவமனையில் 2 பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.