தற்போதைய நிலையில், 6 லட்சத்து 19 ஆயிரத்து 88 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 14 லட்சத்து 27 ஆயிரத்து 6 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.
ஒரே நாளில் 933 பேர் பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42,518 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 61,537 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 933 பேர் பலியாகி இருப்பதாகவும் மத்தியஅரசு அறிவித்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் 61,537 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 20,88,612 ஆக உயர்ந்து உள்ளது.