தூத்துக்குடி:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் காயமடைந்தவர்களை அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்த வகையில் தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டவர்கள் வந்தனர்.

144 தடையுத்தரவு அமலில் இருப்பதால் தொண்டர்களுடன் வந்த பிரேமலதா உள்ளிட்டோர் மீது தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.