சென்னை :

மிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மக்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் நடிகர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து கருத்துக்களை பதிந்து வருவதாக  சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்  அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 18ம் தேதி நடிகர் கமலஹாசன் சட்டசபை உறுப்பினர்கள் தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் “People of Tamizhnadu, Welcome your respective MLAs with the respect they desrve back home” என்று தெரிவித்துள்ளார்.

அதாவது தமிழ்நாட்டு மக்களே தங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களை தகுந்த மரியாதையுடன் வரவேற்க வேண்டும் என்றுகூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்திய தேசிய லீக் கட்சியின் வட சென்னை மாவட்ட தலைவர் பிர்தவ்ஸ் நடிகர் கமலஹாசன் மீது இன்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், “தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மக்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் நடிகர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து கருத்துக்களை பதிந்து வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.