சென்னை:
மிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் நட்சத்திர தங்கும் விடுதிகளை நடத்தி வரும் ஹெரிடேஜ் நிறுவனம், ஆயிரம் கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஹெரிடேஜ் குழுமம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கும் விடுதிகளை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம், பல்வேறு நிதி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அதன் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

கடந்த 4 நாட்களாக நடைபெற்ற இந்த சோதனையில், ஹெரிடேஜ் நிறுவனம் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள 300 ஏக்கர் நிலங்கள் வாங்கியதும், வெளிநாடுகளில் நிறுவனங்கள் தொடங்கி போலி ரசீதுகள் மூலம் முறைகேடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனையின் போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், ஹெரிடேஜ் நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.