மும்பை:

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் சிஇஓ சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனத்துக்கு மொரிசியசில் இருந்து ரூ. 325 கோடி ரூபாய் நிதி பெற்றது.

இது குறித்து அவர் அளித்த திருப்தி அளிக்கவில்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது. வீடியோகான் நிறுவனத்துக்குக் கடன் வழங்கியதில் ஐசிஐசிஐ வங்கி சிஇஓ சந்தா கோச்சாரின் குடும்பம் பலன் அடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து சந்தாவின் கணவர் தீபக் கோச்சாரிடம் வருமானவரித் துறையினர் விசாரணை நடத்தினர். ஆனால், தீபக் கோச்சார் அளித்த விளக்கத்தில் வருமான வரித்துறையினர் திருப்தி அடையவில்லை. எனினும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.