சென்னை,

சென்னையில் உள்ள பிரபலமான ஜாய் ஆலுக்காஸ் நடைகக்டைகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் பல்வேறுகிளை கொண்டுள்ள ஜாய் ஆலுக்காஸ் நகை நிறுவனம் சென்னை தி.நகரிலும் பிரமாண்டமான நகைக்கடையை நடத்தி வருகிறது.

தி.நகர் உஸ்மான் ரோட்டில் உள்ள பிரசாந்த் டவரில் ஜாய் ஆலுக்காஸ் நகை கடை உள்ளது. இந்த கடையில் இன்று காலை 8 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக கடை ஷட்டர் அடைக்கப்பட்டு, பொதுமக்கள் நகைகள் வாங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும்,  ஜாய் ஆலுக்காஸின் 10 கிளைகளிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.