புவனேஷ்வர்

ஒடிசாவில் 16 பேருக்கு கொரோனாத் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.  இவர்கள் அனைவரும் தலைநகர் புவனேஸ்வரைச் சார்ந்தவர்கள்.

இதுவரை அம்மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ள 39,    COVID-19 தொற்றாளர்களில் 31 பேர் புவனேஸ்வரைச் சேர்ந்தவர்கள். பொம்மைகள் பொமிகல் பகுதியிலேயே அதிக தொற்றாளர்கள் உள்ளனர்.

இதுகுறித்து புவனேஸ்வர் ஆணையர் பி.சி.சௌத்ரி கூறுகையில், “ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய 70 வயது முதியவருக்கு புவனேஸ்வரில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதால் சுந்தர்பாதா மற்றும் ஜாதுபூர்  பகுதிகள் முடக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில்  மருத்துவக்குழு வீடுகள்தோறும் சென்று கவனித்து வருகின்றன. இதுவரை 23 கொரோனாத் தொற்றாளர்கள் ஒடிசாவில் குணமடைந்துள்ளனர். அனைத்துப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது” எனவும் கூறினார்…