காத்மண்டு:‍ தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின்(18 வயதினருக்கான) அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, மாலத்தீவை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி ‍ஃபைனலுக்கு முன்னேறியது.

மொத்தம் 6 அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன. ‘பி’ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. ‘ஏ’ பிரிவில் இரண்டாமிடம் பிடித்த மாலத்தீவை சந்தித்த இந்திய அணியின் நரேந்தர் கெலாட் மற்றும் முகமது ரஃபி ‍ஆகியோர் முதல் பாதியில் தலா 1 கோல் அடித்தனர்.

இரண்டாவது பாதியில் இந்தியாவின் மன்வீர் சிங்மற்றும் நின்தோயின்கங்பா மீட்டெய் ஆகியோர் தலா 1 கோல் அடிக்க, இந்திய அணி வெற்றியை உறுதிசெய்தது.

செப்டம்பர் 29ம் தேதி நடைபெறும் ஃபைனலில் இந்திய அணி வங்கதேச அணியை சந்திக்கிறது. ஏற்கனவே லீக் போட்டியில் இரு அணிகளும் டிரா செய்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.