கொழும்பு

முத்தரப்பு டி 20 கிரிக்கெட் போட்டியில்  இந்திய அணி இலங்கை அணையை தோற்கடித்தது.

முத்தரப்பு டி 20 கிரிக்கெட் போட்டிகளில் நேற்று இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் போட்டி நடந்தது.    இந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அப்போது மழை பெய்ததால் போட்டி 19 ஓவர்களாக மாற்றப்பட்டது.    முதலில் விளையாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 152 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டி இலங்கையை தோற்கடித்தது.     இந்திய அணியில் மணீஷ் பாண்டே 42 ரன்கள் எடுத்து உள்ளார்.