ராஞ்சி

ஸ்திரேலியாவுடனான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் டி 20 பந்தயத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

தற்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் தனது டி 20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வெளியாடி வருவது தெரிந்ததே.   நேற்று ராஞ்சியில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான் முதல் டி 20 போட்டி நடந்தது.

போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது.   ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களான வார்னர் மற்றும் பிஞ்ச் ஆட்டத்தை துவங்கினர்.  வார்னர் 8 ரன்களும் பிஞ்ச் 42 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.  பின்பு மேக்ஸ்வெல் (17), ஹெட் (9), ஹென்ரிக்ஸ் (8), கிறிஸ்டியன்(9), பெய்னி(17), கோல்டர் நைல்(1) ஆகிய ரன்களில்  அவுட் ஆனார்கள்.  டை(0) மற்றும் ஜம்பா(4) ரன்களிலும் இருந்தனர்.  மொத்தம் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்துள்ள நிலையில் மழையின் காரணமாக போட்டி நீண்ட நேரம் பாதிப்புக்குள்ளானது.

இதன் பின்பு டக்வொர்த் லூயி முறைப்படி இந்தியா 6 ஓவர்களில் 48 ரன்கள் எடுத்தாக வேண்டும் என வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.    இந்திய அணியினர் அபாரமாக விளையாடி ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்தனர்  இதை தொடர்ந்து இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றதாக அறிவிக்கப்பட்டது.