டில்லி:

ந்தி, இந்து, இந்துத்துவாவை விட இந்தியா பெரியது  என்று இந்தி மொழி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு  ஓவைசி பதிலடி கொடுத்து உள்ளார்.

உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த ஒரே பொது மொழியாக இந்தி பயன்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா டிவிட் பதிவிட்டிருந்தார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பல்வேறு மாநில அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் இந்தி குறித்த கருத்துக்கு தெலங்கானாவில் உள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம் என்ற இஸ்லாமியக் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, டிவிட்டரில் கருத்து கூறியுள்ளார்.

அதில், “எல்லா இந்தியரின் தாய் மொழியும் இந்தி அல்ல. இந்த நாட்டின் பல்வேறு மொழிகளின் அழகையும், வேற்றுமையையும் பாராட்ட முயற்சிப்பீர்களா? வெவ்வேறு மொழி, பேச்சு, கலாச்சாரத்தை பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு இந்தியருக்கும் அரசியல் சட்டப்பிரிவு 29ல் உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தி, இந்து, இந்துத்துவாவை விட மிகப் பெரியது இந்தியா”  என்று கூறியுள்ளார்.