மெல்போர்ன்: இந்திய அணியில் பல தரமான வீரர்கள் இருப்பதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணி மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றுள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பயிற்சியாளர் டேரன் லெஹ்மன்.

அடிலெய்டில் நடைபெற்ற முதல் பகலிரவு டெஸ்ட்டில், இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது அந்த அணி.

இந்நிலையில், டேரன் லெஹ்மன் கூறியுள்ளதாவது, “இது இந்திய அணிக்கு கடினமாக நேரம்தான். ஆனால், அவர்களிடம் ஏற்கனவே தரமான வீரர்கள் உள்ளனர் என்பதை மறக்கலாகாது.

அவர்களிடம் தரமான பெளலிங் அட்டாக் உள்ளது. அவர்களின் பேட்ஸ்மென்கள் பவுன்சர்கள் பந்துகளை சிறப்பாக சமாளித்தால், அந்த அணி தொடரில் வெற்றிக்கான பாதையில் மீண்டும் அடியெடுத்து வைக்கும்.

அவர்களின் பேட்ஸ்மென்கள், முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ரன்களைக் குவிப்பது மிகவும் அவசியம்” என்றார் லேஹ்மன்.