அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியை, இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்திய அணி.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்களை எடுக்க, இந்தியா தனது கணக்காக 365 ரன்களைக் குவித்தது. 160 ரன்கள் பின்தங்கிய நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய இங்கிலாந்து அணியால், 135 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அந்த அணியின் டாம் லாரன்ஸ் அதிகபட்சமாக 50 ரன்களை அடித்து, இறுதியாக அஸிவினிடம் பெளல்டு ஆனார். ஜோ ரூட் 30 ரன்களை சேர்த்தார்.

மொத்தம் 54.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, இந்தியாவிடம் பெரிய தோல்வியைப் பெற்றது.

முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடந்தன. அதில் முதல் டெஸ்ட்டில் தோற்ற இந்தியா, இரண்டாவது டெஸ்ட்டில் வென்றது. தற்போது, அகமதாபாத்தில் நடந்து முடிந்துள்ள 2 போட்டிகளையும் ஜெயித்ததன் மூலம், 3-1 என்ற கணக்கில் தொடரை தனதாக்கியுள்ளது.