தரம்சாலா:

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் பேட்ஸ்மேன்கள் சொதப்ப இந்திய அணி 112 ரன்களில் சுருண்டது. இந்திய வீரர் தோனி அரை சதம் அடித்தார்.

இந்தியாவில் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன் று இமாச்சல் தலைநகர் தரம்சாலாவில் நடந்தது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலிட் பேட்டிங் செய்தது. இந்திய ஒரு நாள் அணிக்கு ரோகித் முதல் முறையாக கேப்டனாக செயல்பட்டார். ரகானே நீக்கப்பட்டு ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஆட்டம் தொடங்கியவுடன் மாத்யூஸ் பந்தில் தவான் டக்- அவுட்டானார். ரோகித் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இப்படி அடுத்தடுத்து விக்கெட்கள சரிந்ததால் பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க திணறினர். தினேஷ் கார்த்திக் ரன் எடுக்காமல் திரும்பினார்.

மணிஷ் பாண்டேவை (2) வெளியேற்றினார். ஸ்ரேயாஸ் ஐயர் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். முடிவில் இந்திய அணி 38.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 112 ரன்கள் எடுத்தது. இலங்கை வீரர் லக்மல் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து விளையாடிய இலங்கை அணி 3 விக்கெட்களை இழந்து 113 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.