புதுடெல்லி:

உலக அளவிலான கச்சா இரும்பு உற்பத்தியில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாம் இடத்தை இந்தியா பெற்றுள்ளது.


உலக இரும்பு உற்பத்தி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சீனாவின் கச்சா இரும்பு உற்பத்தி கடந்த 2017-ம் ஆண்டைவிட 6% அதிகரித்து முதல் இடத்தில் உள்ளது.
இந்தியாவின் கச்சா இரும்பு உற்பத்தி 2017-ல் 101.5 மெட்ரிக் டன்னாக இருந்தது. 2018-ல் 106.5 மெட்ரிக் டன்னாக உயர்ந்தது. அதாவது, 4.9 சதவீத உற்பத்தி அதிகரித்துள்ளது.

இதுவரை இரண்டாம் இடத்தில் இருந்த ஜப்பானின் கச்சா இரும்பு உற்பத்தி 0.3 சதவீதம் குறைந்தது
இதனையடுத்து, ஜப்பானை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

உலக அளவிலான கச்சா இரும்பு உற்பத்தி 1.808.6 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. 2017-ம் ஆண்டைவிட 4.6% அதிகமாகும்.
கச்சாக இரும்பு உற்பத்தியில் உலக அளவில் அமெரிக்கா 4-ம் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 5-ம் இடத்திலும்,ரஷ்யா 6-ம் இடத்திலும், ஜெர்மனி 7-வது இடத்திலும், துருக்கி 8-வது இடத்திலும், பிரேசில் 9-வது இடத்திலும் மற்றும் ஈரான் 10-வது இடத்திலும் உள்ளன.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.