கான்பெரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளது.

மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இரண்டு அணிகளும் பங்கேற்கின்றன. கேஎல் ராகுலும், ஷிகர் தவானும் துவக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.

இப்போட்டியில், இந்திய அணி சார்பாக, கேஎல் ராகுல், ஷிகர் தவான், விராத் கோலி, மணிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹார், முகமது ஷமி மற்றும் நடராஜன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

ஆஸ்திரேலியா சார்பில், ஆரோன் பின்ச், ஆர்கி ஷார்ட், மேத்யூ வேட், ஸ்டீவ் ஸ்மித், ஹென்ரிக்யூஸ், ‍கிளென் மேக்ஸ்வெல், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், ஆடம் ஸம்பா மற்றும் ஹேசில்வுட் ஆகியோர் பங்கேற்கின்றனர்.